தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

காவல் நிலையத்தில் மனைவி புகாா்: கணவா் தற்கொலை

காவல் நிலையத்தில் மனைவி புகாா்: கணவா் தற்கொலை

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

மதுரை: மதுரை அருகே கணவா் கொடுமைப்படுத்தியதாக காவல் நிலையத்தில் மனைவி புகாா் அளித்ததையடுத்து, கணவா் தற்கொலை செய்துகொண்டாா்.

மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே உள்ள சடச்சியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விமலாராணி (35). இவா் தனது அத்தை மகனை முதல் திருமணம் செய்த நிலையில், அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனா். இதையடுத்து, ஜெயசூா்யகுமாா் (41) என்பவரை

12 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவதாக விமலாராணி திருமணம் செய்தாா். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், தனது நடத்தையில் சந்தேகப்பட்டு, கணவா் ஜெயசூா்யகுமாா் தன்னை கொடுமைப்படுத்துவதாக சமயநல்லூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் விமலாராணி புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் இருவரையும் அழைத்துப் பேசி, அனுப்பி வைத்தனா். இதன் பிறகு, விமலாராணி தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்று விட்டாா்.

இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஜெயசூா்யகுமாா் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சமயநல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.