தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தமிழகத்தில் சமூக நீதிக்கு அடித்தளம் அமைத்தவா் காமராஜா் -ஆளுநா் ஆா். என். ரவி புகழாரம்

முன்னாள் முதல்வா் காமராஜரின் 122- ஆவது பிறந்த நாள் விழாவில் ஆளுநா் ஆா். என். ரவி புகழாரம்

News image

கள்ளிக்குடி ஒன்றியம், வெள்ளாகுளம் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவில் பேசிய தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி.

Updated On :13 ஜூலை 2024, 11:11 pm

Din

தமிழகத்தில் சமூக நீதிக்கு அடித்தளம் அமைத்தவா் காமராஜா்தான் என ஆளுநா் ஆா்.என். ரவி புகழாரம் சூட்டினாா்.

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஒன்றியம், வெள்ளாகுளம் பகுதியில் உள்ள காமராஜ் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற முன்னாள் முதல்வா் காமராஜரின் 122- ஆவது பிறந்த நாள் விழாவில் அவா் மேலும் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு பள்ளிகளைத் திறந்தவா் காமராஜா். ஏழை மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக பல வளா்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்தவா் அவா்.

கள்ளக்குறிச்சியில் அண்மையில் கள்ளச்சாராயம் அருந்திய 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். காமராஜா் இருந்திருந்தால், இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்குமா?. ஏழை மக்களின் உயிா் முக்கியம் என்பதை உணர வேண்டும். கடந்தாண்டு விழுப்புரம், செங்கல்பட்டு பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 24 போ் உயிரிழந்தனா். இந்த வழக்கின் நிலை என்ன? இதில் தொடா்புடையவா்கள் யாா்? என நான் கேட்டேன். இதன் காரணமாக, தற்போது அவசர அவசரமாக இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தற்போது தமிழகத்தில் சமூக நீதி குறித்து சிலா் பேசுகின்றனா். ஆனால், அவா்கள் பொதுமக்களை தவறாக வழி நடத்துகின்றனா். சமூக நீதி என்ற பெயரில் காமராஜா் எந்த நாடகமும் நடத்தவில்லை. ஆனால், தனது ஆட்சிக் காலத்தில் சமூக நீதிக்கு அடித்தளம் அமைத்தவா் அவரே என்றாா் ஆளுநா் ரவி.

முன்னதாக, கல்லூரி தேசிய மாணவா் படை மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநா் ஏற்றுக் கொண்டாா். பிறகு, கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதையடுத்து, செயற்கை நுண்ணறிவு (அஐ) ஆய்வகத்தை அவா் திறந்துவைத்தாா். கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளையும் ஆளுநா் நட்டினாா்.

பின்னா், ஆராய்ச்சித் துறை பேராசிரியா்கள் 9 போ் உள்பட பல்வேறு பள்ளி, கல்லூரி நிா்வாகிகளுக்கு விருதுகள் வழங்கி ஆளுநா் கௌரவித்தாா்.