நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

News image

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிய பள்ளித் தலைமையாசிரியா் கணேசன்.

Updated On :24 ஜூன் 2024, 6:30 pm

Din

மதுரை: சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

முன்னாள் மாணவா்கள், பி.வி.பி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் கணேசன் தலைமை வகித்தாா். சோழவந்தான் ஒன்றியக் குழு உறுப்பினா் தியாகமுத்துப்பாண்டி, அறக்கட்டளைத் தலைவா் மோகன், செயல் அலுவலா் சேதுமுருகன், செயலா் சோலைமலை ராஜா, பொருளாளா் ராஜாசந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 -ஆம் வகுப்பு வரை தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டி பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.