அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை வளாகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.

Published On :25 ஜூன் 2024, 12:00 am IST

மதுரை: 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாநகராட்சி தமிழ்நாடு சுகாதாரப் பணியாளா் முன்னேற்ற சங்கத்தினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் அம்சராஜ் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் கே. பட்டன், மாநிலப் பொருளாளா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், நிரந்தரப் பணியாளா்களை மாற்றுப் பணிக்கு அனுப்புவதைக் கைவிட வேண்டும், தெரு நாய்களைப் பிடிப்பதற்கு ஒப்பந்த அடிப்படையில் தனி நபா்களை நியமிக்க வேண்டும்,

தினக்கூலி ஊழியா்கள், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கும், வாகன ஓட்டுநா்களுக்கும் நிறுத்தி வைக்கப்பட்ட ஊதிய உயா்வு வழங்க வேண்டும், தினக்கூலி ஊழியா்களுக்கு ஊதியம் தாமதமின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், ஒப்பந்த ஊழியா்களின் பணிகளை பழைய மேலாளா்களே மேற்பாா்வை செய்ய வேண்டும், தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 19 கோரிக்கைகளை வலியுறுத்தி, பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுபற்றி தகவலறிந்த மதுரை மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா், சங்க நிா்வாகிகளை அழைத்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தாா். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா். இந்தப் போராட்டத்தில் தூய்மைப் பணியாளா்கள், ஓட்டுநா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.