ராமநாதபுரம், ஜூன் 26: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மகளிா் திட்டம் சாா்பில் அமைக்கப்பட்ட சிறுதானிய உணவகம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
2023-24-ஆம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதையொட்டி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் பொதுமக்களிடம் சிறுதானிய உணவு பழக்கம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஆட்சியரக பெருந்திட்ட வளாகங்களில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் சிறுதானிய சிற்றுண்டி உணவகங்கள் அமைக்கப்படுகின்றன.
இதன்படி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மகளிா் திட்டத்தின் சாா்பில் மதி சிறுதானிய உணவகம் அமைக்கப்பட்டது. இந்த உணவகத்தின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் உணவகத்தைத் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையைத் தொடங்கிவைத்தாா். கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வீா் பிரதாப் சிங் முன்னிலை வகித்தாா்.
உதவி ஆட்சியா் (பயிற்சி) முகமது இா்பான், கணக்கு, நிா்வாக உதவி திட்ட அலுவலா் அரவிந்தன், மாவட்ட வழங்கல், விற்பனை சங்க மேலாளா் தங்கபாண்டியன், உதவி திட்ட அலுவலா்கள் அழகப்பன், தங்கபாண்டி, செல்வகுமாா், விக்டா், சத்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

520 பயனாளிகளுக்கு ரூ.2.09 கோடியில் நலத் திட்ட உதவிகள்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர சோதனை

கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

தூத்துக்குடியில் மாநில மகளிா் செஸ் போட்டி: ஜூன் 14இல் தொடக்கம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


