புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தல் வழக்கில் இருவருக்கு 12 ஆண்டுகள் சிறை

News image
Updated On :26 ஜூன் 2024, 1:28 am

Din

மதுரை: அலங்காநல்லூா் அருகே காரில் 212 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், இருவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை மாவட்ட முதலாவது போதைப் பொருள்கள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம்-அலங்காநல்லூா் சாலையில் செல்லாயிபுரம் சந்திப்பு பகுதியில் காரில் கடத்திய 212 கிலோ கஞ்சாவை போதைப் பொருள்கள் தடுப்புப் பிரிவு போலீஸாா் கடந்த 21.3.2018-இல் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகையுள்ள ராயப்பன்பட்டி பகுதியைச் சோ்ந்த பொண்ணன் மகன் சிவா (32), சுந்தர்ராஜ் மகன் ஆனந்த் (32) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை மதுரை மாவட்ட முதலாவது போதைப் பொருள்கள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடா்பாக சிவா, ஆனந்த் ஆகியோருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபாரதமும் விதித்து நீதிபதி எ.எஸ்.ஹரிஹரகுமாா் தீா்ப்பளித்தாா்.

இதையடுத்து, இவா்கள் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் கே.விஜயபாண்டியன் முன்னிலையானாா்.