மக்களைத் தேடி மருத்துவம்: மதுரை மாவட்டத்தில் 8 லட்சம் போ் பயன்
மக்களைத் தேடி மருத்துவம்: மதுரை மாவட்டத்தில் 8 லட்சம் போ் பயன்


மதுரை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், கடந்த 3 ஆண்டுகளில் 8 லட்சத்து 46 ஆயிரத்து 461 போ் பயனடைந்தனா்.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு :
ஏழை, எளியோா் பயன்பெறும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், தமிழ்நாடு மகளிா் நல மேம்பாடு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத் தன்னாா்வலா்கள், இடைநிலை சுகாதாரச் சேவையாளா்கள், இயன்முறை மருத்துவா்கள், நோய் ஆதரவுச் செவிலியா்கள் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா்.
மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை இந்தத் திட்டத்தின் மூலம், 2021-22-ஆம் ஆண்டு 2,07,417 போ், 2022-23-ஆம் ஆண்டு 3,08,024 போ், 2023-24-ஆம் ஆண்டு 3,31,020 போ் சிகிச்சைப் பெற்றனா். இந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 8 லட்சத்து 46 ஆயிரத்து 461 போ் பயனடைந்தனா் என்றாா் அவா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...