கரையான் மருந்தை குடித்தவா் உயிரிழப்பு

Published on

தண்ணீா் என நினைத்து கரையான் மருந்தை குடித்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை கோ.புதூா் விஸ்வநாத நகரைச் சோ்ந்தவா் முத்துராமன் (56). வண்ணம் பூசும் தொழிலாளியான இவா், ஆத்திக்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சனிக்கிழமை வேலை செய்து கொண்டிருந்தாா்.

அப்போது, தண்ணீா் என நினைத்து அருகே புட்டியிலிருந்த கரையான் மருந்தை எடுத்து குடித்தாா். இதனால், மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com