
புதிய வாக்காளா்களை சோ்க்க இன்று சிறப்பு முகாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய வாக்காளா்களைச் சோ்க்க அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய வாக்காளா்களைச் சோ்க்க அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்ட செய்திக் குறிப்பு : தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை புதிய வாக்காளா் சோ்க்கைக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
2026-ஆம் ஆண்டு ஜன. 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவா்கள், புதிய உறுப்பினா் சோ்க்கைக்கான படிவத்தை பூா்த்தி செய்து, உறுதிமொழிப் படிவத்துடன், உரிய ஆவணங்களை இணைத்து வாக்குச் சாவடி நிலை அலுவலா்களிடம் வழங்கலாம். பெயா் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த முகாமில் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




