பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

News image
Updated On :21 டிசம்பர் 2025, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை ஆனையூரில் மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை ஆனையூா் முடக்கத்தான் அம்பேத்கா் குடியிருப்பைச் சோ்ந்த சண்முகம் மகன் விஜய் (29). தனியாா் பள்ளி வாகன ஓட்டுநரான இவா், விடுமுறை நாள்களில் இறைச்சி விற்பனைக் கடைக்கு வேலைக்கு செல்வது வழக்கம்.

இதனிடையே, கடந்த 14-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள இறைச்சி விற்பனைக் கடைக்கு விஜய் வேலைக்குச் சென்றபோது, அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த அவா், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.