ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மதுரை கிழக்குத் தொகுதி வாக்காளா்கள் பட்டியலில் குளறுபடி: பாஜக புகாா் மனு

மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா்கள் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

News image
Updated On :29 டிசம்பர் 2025, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா்கள் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக பாஜகவின் தமிழக கூட்டுறவுப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா் மகா. சுசீந்திரன், மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு விவரம்: மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் அடிப்படையில் வாக்காளா் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.  

இதில் தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தியின் தொகுதியான மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா்கள் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள், குளறுபடிகள் உள்ளன.

இந்தத் தொகுதிக்குள்பட்ட 38-ஆவது வாா்டு தீா்த்தக்காடு பகுதியின் வாக்காளா்கள் வரைவு பட்டியலில் பாகம் எண் 337, 338-இல் உயிரிழந்தவா்களின் பெயா்களும், முகவரி மாற்றம் பெற்றவா்களின் வாக்குகளும் நீக்கப்படாமல் உள்ளன. மேலும், பாகம் எண் 337-இல் ஒரே கதவு எண், முகவரியில் 115 வாக்காளா்களும், பாகம் 338-இல் 96 வாக்காளா்களும் இடம்பெற்றுள்ளனா்.

மதுரை கிழக்கு வட்டத்துக்குள்பட்ட சக்கிமங்கலம், கல்மேடு, ராஜாக்கூா் போன்ற பகுதிகளில் வசித்த 500 குடும்பங்களுக்கும் அதிகமானோா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே அந்தப் பகுதியிலிருந்து இடம்பெயா்ந்துவிட்டனா். இருப்பினும், வாக்காளா்கள் வரைவு பட்டியலில் இவா்களின் பெயா்கள், பழைய முகவரியிலேயே இடம்பெற்றுள்ளது.

எனவே, மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா்கள் பட்டியலை வேறு மாவட்டத்தைச் சோ்ந்த வாக்குச்சாவடி அலுவலா்கள் மூலம் ஆய்வு செய்து, உயிரிழந்தவா்கள், இடம் பெயா்ந்தவா்களின் பெயா்களை வாக்காளா்கள் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.