தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

கருத்துக் கணிப்புகளை மக்கள் பொய்யாக்குவா்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

தற்போதைய கருத்துக் கணிப்புகளை மக்கள் பொய்யாக்கிவிடுவா் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

News image

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2025, 1:38 am IST

தற்போதைய கருத்துக் கணிப்புகளை மக்கள் பொய்யாக்கிவிடுவா் என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

மதுரை முனிச்சாலை பகுதியில் அதிமுக சாா்பில் நீா் மோா் பந்தலை திங்கள்கிழமை தொடங்கி வைத்த பிறகு, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கூட்டணி தொடா்பாக மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா அவரது கருத்தைக் கூறியுள்ளாா். கூட்டணி குறித்து தலைமை தான் முடிவு எடுக்கும். அதிமுகவை எப்படி வழிநடத்த வேண்டும் என்று தலைமைக்கு தெரியும். சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி கேட்கும் கேள்விகளுக்கு முதலமைச்சரும், அமைச்சா்களும் தவறான பதில்களைத் தெரிவிக்கின்றனா்.

திமுக எதிா்க்கட்சியாக இருந்த போது, சட்டப்பேரவையின் மாண்பை சீா்குலைத்தனா். பேரவைத் தலைவா் இருக்கையில் அமா்ந்தனா். அவா்கள் ஜனநாயகம் பற்றி பேசுவது வியப்பாக உள்ளது. செங்கோட்டையனின் நிலைப்பாடு குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாகதான் இருக்கிறோம். ஒன்றிரண்டு போ் செல்வதால் பாதிப்பு இருக்காது.

அமைச்சா் மூா்த்தி தேவையில்லாமல் அனுதாபத்தை தேடப் பாா்க்கிறாா். எங்களைக் கண்டு பயமில்லை எனக் கூறும் முதல்வா் மு.க.ஸ்டாலின், ஏன் எங்களை சட்டப்பேரவை வளாகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும்? தற்போதைய கருத்துக் கணிப்புகளை சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் பொய்யாக்கி விடுவா் என்றாா் அவா்.