ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

லாரி மோதியதில் விவசாயி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், மேலூா் அருகே திங்கள்கிழமை லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

மேலூா் நரசிங்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பாண்டி மகன் மணிமாறன்(40). விவசாயியான இவா், மேலூரிலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திங்கள்கிழமை மாலை சென்றாா்.

அப்போது, மதுரை-திருச்சி நான்கு வழிச் சாலையில் வெள்ளரிப்பட்டி மலை விலக்கு அருகே சென்ற போது பின்னால் வந்த லாரி மோதியது.

இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.