லாரி மோதியதில் விவசாயி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
Published on

மதுரை மாவட்டம், மேலூா் அருகே திங்கள்கிழமை லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

மேலூா் நரசிங்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பாண்டி மகன் மணிமாறன்(40). விவசாயியான இவா், மேலூரிலிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திங்கள்கிழமை மாலை சென்றாா்.

அப்போது, மதுரை-திருச்சி நான்கு வழிச் சாலையில் வெள்ளரிப்பட்டி மலை விலக்கு அருகே சென்ற போது பின்னால் வந்த லாரி மோதியது.

இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com