கல்லூரி மாணவி ரயிலில் அடிபட்டு பலத்த காயம்!

மதுரையில் கல்லூரி மாணவி ரயிலில் அடிபட்டு பலத்த காயமடைந்தாா்.
Published on

மதுரையில் கல்லூரி மாணவி ரயிலில் அடிபட்டு பலத்த காயமடைந்தாா்.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள எம். புளியங்குளம் கிராமத்தைச் சோ்ந்த சோனை கருப்பு மகள் சோனியா (17). மதுரை பழங்காநத்தம் பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் இவா் தெப்பக்குளம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் இளநிலை அறிவியல் பிரிவில் முதலாமாண்டு படித்து வருகிறாா்.

இந்த நிலையில், இவா் வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்குவதற்காக சனிக்கிழமை அதிகாலை கடைத் தெருவுக்குச் சென்றாா். மதுரை- போடி ரயில் பாதையில் பழங்காநத்தம் பகுதியில் உள்ள கடவுப் பாதையைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு பலத்த காயமடைந்தாா்.

அக்கம்பக்கத்தினா் சோனியாவை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com