ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கண்மாயில் மூழ்கிய முதியவா் உயிரிழப்பு

News image
Updated On :24 நவம்பர் 2025, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை அருகே கண்மாயில் மூழ்கிய முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை சிலையனேரி மந்தையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மாசானம் மகன் முத்து இருள்(60). இவா், அதே பகுதியில் உள்ள கண்மாயில் மீன் பிடிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக கண்மாய் நீரில் மூழ்கினாா். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.