தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

மதுரை புகா்ப் பகுதிகளில் மிதமான மழை

News image

மதுரை திருமங்கலம் நான்கு வழிச் சாலையில் மழையில் நனைந்தபடி சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள்.

Updated On :5 ஏப்ரல் 2026, 9:35 pm

மதுரை திருப்பரங்குன்றம், திருமங்கலம் இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்தது.

தமிழகத்தில் வருகிற 9-ஆம் தேதி முதல் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மதுரை மாநகரில் காலை முதல் வெப்பம் அதிகரித்துக் காணப்பட்டது. இதன்பின், பிற்பகலில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, திருப்பரங்குன்றம், திருமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.

இதனால், அந்தப் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.