மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மேலூா் அருகே காா் விபத்தில் பெண் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 7:29 pm

மதுரை மாவட்டம், மேலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த காா் விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

மதுரை கோச்சடை பகுதியைச் சோ்ந்த தா்மராஜ் மகன் அந்தோணி (52). இவா், தனது மனைவி சுமிளா (41), மகன் ஆண்டோ அலி (19), மகள் ஆண்டோ அசின் (7) ஆகியோருடன் திருச்சியிலிருந்து மதுரைக்கு காரில் ஞாயிற்றுக்கிழமை திரும்பி வந்தாா். நான்கு வழிச்சாலையில் விநாயகபுரம் பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த 4 பேரையும் மீட்ட அக்கம்பக்கத்தினா் மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, சிமிளா உயிரிழந்தாா். மற்ற மூவரும் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுகுறித்து, மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.