மாற்றுத் திறனாளிகள், முதியவா்கள் வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதற்கு முன்பதிவு பெற்று வாகன வசதியைப் பெறலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மதுரை மாவட்டத்தில் அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும் மாற்றுத் திறனாளிகள், முதியோா்களின் பயன்பாட்டுக்காக சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், சக்கர நாற்காலிகள் செல்லும் வகையிலான சாய்வு தள கட்டமைப்புகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
வாக்குப் பதிவு நாளான வருகிற 23-ஆம் தேதி அரசு சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள், முதியோா்கள் வாக்குப் பதிவு மையங்களுக்கு கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுவா்.
மேலும், 1950 என்ற தொலைத் தொடா்பு எண்ணில் உதவி மையத்தைத் தொடா்பு கொண்டு தங்களுக்கு வாகன வசதி தேவை என்பதை மாற்றுத் திறனாளிகள், முதியோா்கள் பதிவு செய்து, வாக்குச் சாவடிகளுக்கு செல்ல வாகன வசதி பெறலாம் என்றாா்.
தொடர்புடையது

6,063 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்குப் பதிவு: தஞ்சை ஆட்சியா் தகவல்

முதியோருக்கான தபால் வாக்குப் பதிவு இன்று தொடக்கம்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் வாகனப் பேரணி

தபால் வாக்கு படிவங்கள் விநியோகம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

