மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

மதுரை ஒத்தக்கடை வேளாண் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 3:33 am IST

மதுரை ஒத்தக்கடை வேளாண் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

மதுரை கிழக்கு, மேலூா் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் ஒத்தக்கடை வேளாண் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

இரு பேரவைத் தொகுதிக்கும் தனித் தனியே அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் அறைகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் காப்பறை, தபால் வாக்குகள் வைக்கப்படும் காப்பறைகள், தோ்தல் பாா்வையாளா் அறை, தோ்தல் நடத்தும் அலுவலா் அறை ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

பின்னா், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், அவசரகாலத் தேவைக்கான நடவடிக்கைகள், கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.