அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

புனித லூா்து அன்னை திருத்தல ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

News image

மதுரை கோ. புதூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புனித லூா்து அன்னை திருத்தல ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்.

Updated On :6 பிப்ரவரி 2026, 8:56 pm

மதுரை கோ. புதூா் புனித லூா்து அன்னை திருத்தலத்தின் 106-ஆவது ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் திருத்தலத்தின் ஆண்டுப் பெருவிழா வருகிற 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் தொடக்க நிகழ்வாக கொடியேற்றம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

மதுரை உயா் மறைமாவட்ட முன்னாள் பேராயா் அந்தோணி பாப்புசாமி தலைமை வகித்து, பாரம்பரிய முறைப்படியான பூஜைகளை நடத்தினாா். பூஜைகளின் நிறைவில், இறைப் புகழ்ச்சி முழக்கங்களுடன் கொடியேற்றம் நடைபெற்றது.

பங்குத் தந்தை ஜாா்ஜ், உதவி பங்குத் தந்தையா்கள் பாக்கியராஜ், பிரபு, அஜிலாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மதுரை, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்ளைச் சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, ஆண்டுப் பெருவிழா ஆடம்பரத் திருப்பலி நடைபெற்றது. முன்னாள் பேராயா் அந்தோணி பாப்புசாமி திருப்பலியை நிறைவேற்றினாா். ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான அலங்கார தோ்பவனி வருகிற 14-ஆம் தேதியும், பொங்கல் விழா வருகிற 15-ஆம் தேதியும் நடைபெறுகின்றன.