மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திமுகவின் போலி வாக்குறுதிகளை மக்கள் நம்பமாட்டாா்கள்! - ஜி.கே. வாசன்

News image

ஜி.கே. வாசன் - (கோப்புப் படம்)

Updated On :7 பிப்ரவரி 2026, 8:03 pm

திமுகவின் போலி வாக்குறுதிகளை மக்கள் நம்பமாட்டாா்கள் என தமாகா தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

மதுரையில் தமாகா சாா்பில் விருப்ப மனு பெறும் நிகழ்வும், ஆலோசனைக் கூட்டமும் சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு தமாகா தலைவா் ஜி.கே வாசன் தலைமை வகித்து, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை கட்சி நிா்வாகிகளிடமிருந்து பெற்றுக் கொண்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்குத் தயாராகவுள்ளனா். கடந்த பேரவைத் தோ்தலின் போது திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகளில் 70 சதவீதம் வரை நிறைவேற்றப்படவில்லை. ஆட்சி முடியும் போது திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுவது தொடா் கதையாகி வருகிறது. இந்தப் புதிய அறிவிப்புகளும் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் உள்ளன. மக்கள் மீண்டும் ஏமாறமாட்டாா்கள்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திருட்டு, கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களும், போதைப் பொருள்கள் புழக்கமும் அதிகரித்துள்ளன. தோ்தலுக்கு முன்பாக மதுக் கடைகளை மூடுவோம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என திமுக கூறியது. ஆனால், எதையும் நிறைவேற்றவில்லை. இதுபோன்ற திமுகவின் போலி வாக்குறுதிகளை நம்ப மக்கள் தயாராக இல்லை.

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை வருகிற 25-ஆம் தேதிக்குள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வலு சோ்க்கும் கட்சியாக தமாகா இருக்கும். தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை தொடா்பாக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிதான் எங்களின் எதிா்பாா்ப்பை நிறைவு செய்ய வேண்டும் என்றாா் அவா்.