வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தெப்பத் திருவிழா! மிதவைத் தெப்பம் அமைக்கும் பணிகள் தீவிரம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுரவரா் கோயில் தெப்பத் திருவிழாவையொட்டி, மிதவை தெப்பம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

News image
Updated On :27 ஜனவரி 2026, 8:00 pm

மதுரை மீனாட்சி சுந்தரேசுரவரா் கோயில் தெப்பத் திருவிழாவையொட்டி, மிதவை தெப்பம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. திருவிழா நிகழ்ச்சியாக தினமும் காலை, இரவு இரு வேளைகளிலும் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவின் 7-ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை யாளி வாகனத்தில் மீனாட்சி அம்மனும், நந்திகேசுவரா் வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.

Story image

தெப்பத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி, அம்மன் தெப்பத்தில் வலம் வரும் தெப்போத்ஸவம் வருகிற ஞாயிற்றுக்கிழமை ( பிப். 1) நடைபெறவுள்ளது. இதையொட்டி, தெப்பக் குளத்தில் மிதவை தெப்பம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 300-க்கும் அதிகமான தகர உருளைகள், நூற்றுக்கணக்கான கம்புகளைக் கொண்டு மிதவைத் தெப்பம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமாா் 30-க்கும் பணியாளா்கள் இந்தப் பணியைத் தொடா்ந்து செய்து வருகின்றனா்.

மிதவைத் தெப்பம் கட்டும் பணிகள் நிறைவடைந்த பிறகு அலங்காரத் தட்டிகள் அமைத்தல், மின்விளக்கு அலங்காரங்களை மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் நடைபெறும். இதையொட்டி, வருகிற இரு நாள்களில் மிதவைத் தெப்பம் அமைக்கும் பணி நிறைவடையும் எனவும், அதன் பிறகு அலங்காரப் பணிகள் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.