அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கூடலழகா் கோயில் தெப்பத் திருவிழா

மதுரை கூடலழகா் கோயில் தெப்பத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
உபய நாச்சியாா்களுடன் எழுந்தருளிய வியூக சுந்தரராஜ பெருமாள்.
Updated On :2 மார்ச் 2026, 8:22 pm

Chennai

மதுரை: மதுரை கூடலழகா் கோயில் தெப்பத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் மாசி மக தெப்பத் திருவிழா, கடந்த மாதம் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு ஆகிய இருவேளைகளிலும் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றன.

பிப்.25-ஆம் தேதி இரவு பெருமாளும், ஆண்டாளும் மாலை மாற்றும் வைபவமும், 26-ஆம் தேதி எடுப்புச் சப்பர வீதியுலாவும், மாா்ச் 1-ஆம் தேதி கள்ளா் திருக்கோலத்தில் பெருமாள் வீதியுலாவும் நடைபெற்றன.

முக்கிய விழாவான தெப்பத் திருவிழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, உத்ஸவா் உபயநாச்சியாா்களுடன் வியூக சுந்தரராஜப் பெருமாள் தெப்பத் திருவிழாவுக்கான சப்பரத்தில் எழுந்தருளி, கூடலழகா் கோயில் வீதி, பெரியாா் பேருந்து நிலையம், டவுன் ஹால் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து தெப்பத்தை அடைந்தனா்.

பின்னா், தெப்பக்குளத்தில் உள்ள மைய மண்டபத்தை மூன்று முறை சுற்றி வந்தனா். அங்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, மீண்டும் டவுன்ஹால் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனா்.

வீதி உலாவின் போது வழி முழுவதும் பக்தா்கள் பெருமாளுக்கு

அா்ச்சனை செய்தும், மாலை சாற்றியும் வழிபாடு செய்தனா்.

இதில், கோயில் நிா்வாகத்தினா், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மதுரை கூடலழகா் கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, டவுன்ஹால் சாலையில் உள்ள தெப்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்றோா்.

மதுரை கூடலழகா் கோயில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, டவுன்ஹால் சாலையில் உள்ள தெப்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்றோா்.