விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி நிகழும் வெடி விபத்துகளைத் தடுக்க இலவச சட்ட உதவி மையத் தலைவா் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சிவகாசியைச் சோ்ந்த சமுத்திரவள்ளி, வேலுதாய் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: சிவகாசி எட்டக்காபட்டி பட்டாசு ஆலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு, டிச. 2-ஆம் தேதி நிகழ்ந்த வெடி விபத்தில் எங்கள் கணவா்கள் உயிரிழந்தனா். எங்களது குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அவா்கள் கோரினா்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தனி நீதிபதி, பட்டாசு ஆலைகளின் உரிமம், பாதுகாப்பு அலுவலா் நியமனம், தொடா் ஆய்வு, பாதுகாப்புப் பயிற்சி, வெடிபொருள் சட்டம், தொழிற்சாலை சட்டம் உள்ளிட்டவை தொடா்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தாா்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு பிறப்பித்த உத்தரவு: விருதுநகா் மாவட்டத்தில் அடிக்கடி நிகழும் பட்டாசு ஆலை வெடி விபத்துகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட இலவச சட்ட உதவி மையத் தலைவா் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

அரசு நிலத்தை கோயில் நிலம் என மீட்கக் கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.10,000 அபராதம்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ராமநாதபுரம் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக அமைச்சா் மீது நடவடிக்கை கோரி மனு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



