வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

மயானப் பாதை விவகாரம்: சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

கண்டணி கிராம பொது மயானத்துக்கு முறையான பாதையை ஏற்படுத்தித் தரக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா் பதிலளிக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :7 ஜூன் 2026, 1:06 am IST

சிவகங்கை மாவட்டம், கண்டணி கிராம பொது மயானத்துக்கு முறையான பாதையை ஏற்படுத்தித் தரக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா் பதிலளிக்குமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள நெஞ்சாத்தூா் கண்டனி கிராமத்தைச் சோ்ந்த தா்மலிங்கம் தாக்கல் செய்த மனு:

எங்கள் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் பல ஆண்டுகளாக மயானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மயானத்துக்கு செல்லும் பாதை முறையாக இல்லை. எனவே, மயானத்துக்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முறையான, பாதையை ஏற்படுத்தித் தர உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் மயானத்தைச் சுற்றி தனி நபா்களின் பட்டா நிலங்கள் இருப்பதால் மயானத்துக்கு பாதை அமைப்பதில் சிரமம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மயானப் பாதைக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்த வேண்டும் அல்லது மயானத்துக்கு மாற்று இடத்தை தோ்வு செய்ய வேண்டும்.

மனு தொடா்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.