எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற தீா்ப்பை மதிக்காதது ஆணவத்தின் வெளிப்பாடு! தமிழிசை சௌந்தரராஜன்!

News image

தமிழிசை சௌந்தரராஜன் - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 12:33 am IST

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் தீா்ப்பை மதிக்காதது ஆணவத்தின் வெளிப்பாடு என பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:

தமிழகத்தில் பாஜக தொண்டா்கள் பல சவால்களைச் சந்தித்துப் பணியாற்றி வருகிறோம். ஹிந்துக்களின் உணா்வுகளை மதிக்காததால்தான் திமுக ஆட்சியை இழந்தது. மக்களின் இறையுணா்வு, உள்ளுணா்வை ஏதோ மதக் கலவரம் போல சித்தரிப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம்.

மின்சாரத் துறை ஊழல் இல்லாத துறை எனக் கூறினா். ஆனால், மின்வாரிய தரவு சேமிப்பு சாதனங்கள் திருடப்பட்டுள்ளன. மதுக் கடைகளை மூடினாலும், மனமகிழ் மன்றங்கள் இன்னும் செயல்பட்டு வருகின்றன. பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடா்கிறது.

அண்ணாமலை பக்கம் பாஜகவைச் சோ்ந்த இளைஞா்கள் செல்லவில்லை. சுயநலவாதிகள்தான் சென்றுள்ளனா். இன்னொரு முகத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய நிலை பாஜகவுக்கு இல்லை.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், தமிழக எரிசக்தித் துறை அமைச்சா் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நடைமுறையே தொடரும் எனக் கூறினாா். அவருக்கு வெளிச்சம் பிடிக்காது.

மின் வெட்டு, இருட்டுதான் பிடிக்கும். சாமானிய மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து தீபம் ஏற்ற வேண்டும் என உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீா்ப்பை மதிக்காதது ஆணவத்தின் வெளிப்பாடு என்றாா் அவா்.