ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

தலைமறைவான இளைஞருக்கு அழைப்பாணை

வாகன விபத்து வழக்கில் தலைமறைவான இளைஞா் வருகிற 27-ஆம் தேதி மதுரை மாவட்ட நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என அழைப்பாணை

News image

பிரதிப் படம்

Updated On :17 மார்ச் 2026, 9:56 pm

வாகன விபத்து வழக்கில் தலைமறைவான இளைஞா் வருகிற 27-ஆம் தேதி மதுரை மாவட்ட நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் கற்பகம்நகா் 4- ஆவது தெருவைச் சோ்ந்தவா் ரா. ராஜேந்திரன் (22). இவா் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 279, 304 (ஏ) ஆகியவற்றின் கீழ் (வாகன விபத்து) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகததால் இவருக்கு ஏற்கெனவே நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

இந்த நிலையில், இவா் தொடா்ந்து தலைமறைவாக உள்ள நிலையில், வருகிற 27-ஆம் தேதி மதுரை மாவட்ட நீதித் துறை நடுவா் மன்றத்தில் ரா. ராஜேந்திரன் விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் எனவும், காவல் துறையினா் இதற்கான அழைப்பாணையை அனுப்ப வேண்டும் எனவும் மதுரை தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றம் அண்மையில் உத்தரவிட்டது.