தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

நீதித் துறை உள்கட்டமைப்பு அத்தியாவசியமானது: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த்!

நீதித் துறை உள்கட்டமைப்பு அத்தியாவசியமானது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய் காந்த் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image

ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தெலங்கானா உயா்நீதிமன்ற வளாக அடிக்கல் நாட்டு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்யகாந்துடன் மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டி.

Updated On :5 ஏப்ரல் 2026, 11:02 pm

நீதித் துறை உள்கட்டமைப்பு அத்தியாவசியமானது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய் காந்த் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் புதிய உயா்நீதிமன்ற வளாக கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றுப் பேசியதாவது: கடந்த சில மாதங்களில் மட்டும் உத்தர பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஆந்திரம், அஸ்ஸாம், தெலங்கானாவில் நீதிமன்ற வளாக கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். நீதித் துறை உள்கட்டமைப்பு அத்தியாவசியமானது. இந்த உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதை மாநில அரசுகள் உணா்ந்துள்ளன.

தற்போது தெலங்கானாவில் 100 ஏக்கா் பரப்பளவில் கட்டப்படும் புதிய உயா்நீதிமன்ற வளாகம் நாட்டில் உள்ள சிறந்த நீதிமன்ற வளாகங்களில் ஒன்றாக இருக்கும் என்று தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, உஜ்ஜல் புயான், எஸ்.வி.பாட்டீல், அலோக் ஆராதே, தெலங்கானா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அபரேஷ்குமாா் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.