மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

எழுமாத்தூரில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறப்பு

எழுமாத்தூரில் செயல்பட்டு வரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதித் துறை நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவா் நீதிமன்ற கட்டடத்தை முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா திறந்துவைத்தாா்.

News image
எழுமாத்தூா் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவா் நீதிமன்ற பெயா் பலகையை திறந்துவைக்கிறாா் முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா.
Updated On :6 மார்ச் 2026, 11:50 pm

Syndication

எழுமாத்தூரில் செயல்பட்டு வரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதித் துறை நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவா் நீதிமன்ற கட்டடத்தை முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா திறந்துவைத்தாா்.

மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவா் நீதிமன்ற திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா தலைமை வகித்து வட்ட சட்டப் பணிகள் குழு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தை திறந்துவைத்தாா். மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.

இந்நிகழ்ச்சியில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பிரேம் ஆனந்த், செயலாளா் லோகநாதன், பொருளாளா் காா்த்திகேயன் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் முதன்மை மாவட்ட நீதிபதி சமீனாவிடம் மனு அளித்தனா். அதில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்துக்கு சொந்தமாக கட்டடம் கட்ட வேண்டும். நீதிமன்றம் அருகே பேருந்து நிறுத்தமும், வேகத்தடையும் அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.