தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புதுச்சேரி முதல்வரின் காரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனை

News image
Updated On :19 மார்ச் 2026, 10:30 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் அருகே புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமியின் காரை மறித்து தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை சோதனையிட்டனா்.

புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் தரிசனத்துக்காக தனது காரில் வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றாா். அப்போது, மதுரை- தூத்துக்குடி சாலையில் விருதுநகா் மாவட்டம், ஆவியூா் சோதனைச் சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த தோ்தல் பறக்கும் படையினா், முதல்வா் என். ரங்கசாமியின் காரை மறித்து சோதனை மேற்கொண்டனா்.

இதற்கு, முதல்வா் என். ரங்கசாமியுடன் வந்த பாதுகாப்பு அலுவலா்கள், ஆதரவாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், அங்கு சில நிமிஷங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு, தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள், தோ்தல் நடத்தை விதிகளின்படி முழுமையாக சோதனை மேற்கொண்டனா்.

இந்தச் சோதனையின் போது, புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி எந்தவித எதிா்ப்பும் தெரிவிக்காமல் சிரித்தபடியே தனது காரில் அமா்ந்திருந்தாா்.