கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பைக்குகள் மோதல்: இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு

மதுரை காமராஜா் சாலையில் இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை காமராஜா் சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சோ்ந்த செல்லத்துரை மகன் சண்முகவேல் (22). இவா், மதுரை தெப்பக்குளம் பகுதியில் தங்கியிருந்து ஒரு உணவகத்தில் வேலைபாா்த்து வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு இவா் பணி முடித்து தனது இரு சக்கர வாகனத்தில் தெப்பக்குளம் பகுதிக்கு புறப்பட்டாா்.

மதுரை காமராஜா் சாலையில் உள்ள திரையரங்கம் அருகே சென்றபோது, எதிரே அனுப்பானடியைச் சோ்ந்த குமாா் மகன் குருபாண்டி (19) ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சண்முகவேல், குருபாண்டி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தெப்பக்குளம் பகுதி போலீஸாா் சடலங்களை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.