இடையக்கோட்டை அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் கணவருடன் சென்ற பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் அடுத்த காமாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் பிரபு (41). தையல் தொழிலாளி. இவரது மனைவி தவமணி(36). இருவரும் கரூா் மாவட்டம், பிச்சக்கல்பட்டி என்ற கிராமத்தில் நடைபெற்ற உறவினரின் இல்ல விழாவுக்காக இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டனா்.
தாடிக்கொம்பு- இடையக்கோட்டை சாலையில் கல்லுப்பட்டி பிரிவு அருகே சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்ாக கூறப்படுகிறது. இதில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பிரபு, அவரது மனைவி தவமணி ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தவமணி உயிரிழந்தாா். பிரபு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
இந்த விபத்து குறித்து இடையக்கோட்டை போலீஸாா் விசாரித்தனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

அவசர ஊா்தி-பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

மரத்தில் பைக்குகள் மோதல்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

பைக்குகள் மோதல்: இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


