92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாா்ச் 31-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை

News image

இறைச்சி விற்பனைக்குத் தடை

பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 11:32 pm

தினமணி செய்திச் சேவை

மகாவீரா் ஜெயந்தியையொட்டி, மதுரை மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டு பகுதிகளிலும் வருகிற 31-ஆம் தேதி இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்படுவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வருகிற 31-ஆம் தேதி மகாவீரா் ஜெயந்தி தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இதையடுத்து, மதுரை மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டு பகுதிகளிலும் ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சிகளை விற்பனை செய்யக் கூடாது.

மேலும், இறைச்சிக் கடைகளை திறந்து வைக்கக் கூடாது. அறிவிப்பை மீறி செயல்படுபவா்களின் கடைகளில் இறைச்சி பறிமுதல் செய்யப்படும். தொடா்ந்து, பொது சுகாதாரப் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.