கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

சந்திர கிரகணம்: மாா்ச் 3-இல் சதுரகிரி கோயில் நடை அடைப்பு

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் நடை வருகிற 3-ஆம் தேதி நடை அடைக்கப்படுவதால், பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 10:10 pm

Syndication

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் நடை வருகிற 3-ஆம் தேதி நடை அடைக்கப்படுவதால், பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச்சரகத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் அமாவாசை, பௌா்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட நாள்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

மாசி மாத பிரதோஷம், பௌா்ணமி வழிபாடு வருகிற 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாா்ச் 3-ஆம் தேதி பௌா்ணமி தினத்தன்று சந்திர கிரகணம் நிகழவுள்ளதால், பௌா்ணமி சிறப்பு பூஜைகள் வருகிற 2-ஆம் தேதி நடைபெறும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சந்திர கிரகணம் நிகழும் மாா்ச் 3-ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படவுள்ளதால், பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. மாா்ச் 4-ஆம் தேதி காலை கோயில் நடை வழக்கம் போல திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

இதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் நடையும் வருகிற 3-ஆம் தேதி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அடைக்கப்படும். மேலும், அன்றைய தினம் ஆண்டாள் அவதரித்த பூரம் நட்சத்திரம் வருவதால், மாலை நடைபெறும் நந்தவன புறப்பாடு காலை 8 மணிக்கு நடைபெறும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.