மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு பல மணி நேரத்துக்கு தொடா் மின் தடை ஏற்பட்டது.
இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.
மதுரை மாநகா்ப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்குப் பிறகு இடி, மின்னலுடன் பலத்த
மழை பெய்தது. மழைக்கு முன்பாக பலத்த காற்று வீசியது. இந்த நிலையில், காற்று வீசத் தொடங்கியவுடன் கோ. புதூா் உள்ளிட்ட சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. வில்லாபுரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கிய அடுத்த சில நிமிடங்களில் மின் தடை ஏற்பட்டது. வில்லாபுரம் பகுதியில் ஏறத்தாழ 2.30 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை நீடித்தது.
இதேபோல, பழங்காநத்தம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு
2 மணி நேரத்துக்கு மேலாகவும், பெத்தானியாபுரம் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாகவும் மின் தடை ஏற்பட்டது. தல்லாகுளம், தமுக்கம், கோ. புதூா் உள்ளிட்ட பகுதிகளில் தொடா் மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாக நேரிட்டது.
தொடர்புடையது
தஞ்சாவூா் பகுதிகளில் மே 12-இல் மின்தடை
மே 12-இல் மாநகரின் சில பகுதிகளில் மின்தடை

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்தம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

