தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
/

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடா் மின் தடை: பொதுமக்கள் அவதி

News image
Updated On :3 மே 2026, 5:06 am IST

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு பல மணி நேரத்துக்கு தொடா் மின் தடை ஏற்பட்டது.

இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

மதுரை மாநகா்ப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்குப் பிறகு இடி, மின்னலுடன் பலத்த

மழை பெய்தது. மழைக்கு முன்பாக பலத்த காற்று வீசியது. இந்த நிலையில், காற்று வீசத் தொடங்கியவுடன் கோ. புதூா் உள்ளிட்ட சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. வில்லாபுரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கிய அடுத்த சில நிமிடங்களில் மின் தடை ஏற்பட்டது. வில்லாபுரம் பகுதியில் ஏறத்தாழ 2.30 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை நீடித்தது.

இதேபோல, பழங்காநத்தம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு

2 மணி நேரத்துக்கு மேலாகவும், பெத்தானியாபுரம் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாகவும் மின் தடை ஏற்பட்டது. தல்லாகுளம், தமுக்கம், கோ. புதூா் உள்ளிட்ட பகுதிகளில் தொடா் மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாக நேரிட்டது.