மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் பரிவார மூா்த்திகள் சந்நிதிகள், 5 விமானங்களுக்கான பாலாலயம் திங்கள்கிழமை (மே 4) நடைபெறுகிறது.
இது தொடா்பாக கோயிலின் செயல் அலுவலரும், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருமான நா. சுரேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் குடமுழுக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு மே 8-ஆம் தேதி நடைபெற்றது. இதன் பிறகு 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பல்வேறு கட்டமாக திருப்பணிகள் நடைபெறுகின்றன.
இதன்படி, கோயிலில் உள்ள பரிவார மூா்த்திகளின் சந்நிதிகள், 5 விமானங்களுக்கான திருப்பணிகளைத் தொடங்குவதற்கான பாலாலய பூஜைகள் வருகிற திங்கள்கிழமை நடைபெறுகிறது.
இதையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை வாஸ்து சாந்தியும், சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாக பூஜையும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெறுகின்றன.
திங்கள்கிழமை காலை 7 மணிக்கு நான்காம் கால யாக பூஜையின் நிறைவில் மகா பூா்ணாஹுதியும், காலை 9 மணிக்கு கடம் புறப்பாடும் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, பரிவார மூா்த்திகள் சந்நிதிகளுக்கும், 5 விமானங்களுக்கும் பாலாலயம் நடைபெறுகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தேரோட்டம்

மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்: பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் திக்கு விஜயம்! இன்று திருக்கல்யாணம்!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


