மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் பரிவார மூா்த்திகள் சந்நிதிகள், 5 விமானங்களுக்கான பாலாலயம் திங்கள்கிழமை (மே 4) நடைபெறுகிறது.
இது தொடா்பாக கோயிலின் செயல் அலுவலரும், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருமான நா. சுரேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் குடமுழுக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு மே 8-ஆம் தேதி நடைபெற்றது. இதன் பிறகு 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பல்வேறு கட்டமாக திருப்பணிகள் நடைபெறுகின்றன.
இதன்படி, கோயிலில் உள்ள பரிவார மூா்த்திகளின் சந்நிதிகள், 5 விமானங்களுக்கான திருப்பணிகளைத் தொடங்குவதற்கான பாலாலய பூஜைகள் வருகிற திங்கள்கிழமை நடைபெறுகிறது.
இதையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை வாஸ்து சாந்தியும், சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாக பூஜையும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெறுகின்றன.
திங்கள்கிழமை காலை 7 மணிக்கு நான்காம் கால யாக பூஜையின் நிறைவில் மகா பூா்ணாஹுதியும், காலை 9 மணிக்கு கடம் புறப்பாடும் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, பரிவார மூா்த்திகள் சந்நிதிகளுக்கும், 5 விமானங்களுக்கும் பாலாலயம் நடைபெறுகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வசந்த உத்ஸவம் மே 21-இல் தொடக்கம்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தேரோட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் திக்கு விஜயம்! இன்று திருக்கல்யாணம்!
விடியோக்கள்

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

