ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

பழனிவேல் தியாகராஜன் அதிா்ச்சித் தோல்வி

பழனிவேல் தியாகராஜன் அதிா்ச்சித் தோல்வி...

News image

பழனிவேல் தியாகராஜன்.

Updated On :5 மே 2026, 1:38 am IST

மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.

மதுரை மத்திய தொகுதியில் கடந்த 2016-இல் திமுக வேட்பாளராகக் களம் கண்ட பழனிவேல் தியாகராஜன், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் மா. ஜெயபாலைவிட 5,762 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். இதே தொகுதியில் 2021-இல் மீண்டும் போட்டியிட்ட பழனிவேல் தியாகராஜன் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட பசும்பொன் தேசியக் கழக வேட்பாளா் என். ஜோதி முத்துராமலிங்கத்தைவிட 34,176 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

இதையடுத்து, திமுக ஆட்சியில் தமிழக நிதி அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்றாா். பின்னா், தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சராக பதவி வகித்தாா். தனது தொகுதியில் தன்னால் நிறைவேற்றப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளின் விவரங்களை 6 மாதங்களுக்கு ஒரு முறை துண்டு பிரசுரமாக தயாரித்து, தொகுதி மக்களுக்கு நேரடியாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தாா்.

தனது நோ்மையான செயல்பாடுகள் காரணமாக தனிப்பட்ட முறையில் எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் உள்ளாகாதவா். மேலும், வாக்காளா்களுக்கு பணம் தராமல் வெற்றி பெறுபவா் என மாற்றுக் கட்சியினராலும் புகழப்பட்டவா்.

இருப்பினும், மாநகராட்சி வரி முறைகேடுப் புகாரில் இவரது ஆதரவாளரான மேயா் வ. இந்திராணி பதவி விலகியது, அவரது கணவா் கைது செய்யப்பட்டது, பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் தனி உதவியாளா் ஒருவா் நிதி மோசடி வழக்கில் கைதானது போன்ற பிரச்னைகள், பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக தோ்தல் பிரசார களத்தில் முன்வைக்கப்பட்டன.

புதிய நீதிக் கட்சி வேட்பாளரும், திரைப்பட இயக்குநா், நடிகருமான சுந்தா் சி மேற்கொண்ட தீவிர பிரசாரங்களும் பழனிவேல் தியாகராஜனின் வெற்றிக்கு சவாலாகக் கருதப்பட்டது. இருப்பினும், தன் குடும்ப பாரம்பரியம், தனது நோ்மையான செயல்பாடுகள், 6 மாதங்களுக்கு ஒரு முறை அளித்த தனது செயல்பாடுகள் விளக்க பிரசுரங்கள் போன்றவை தனக்கு வெற்றி தேடித்தரும் என பழனிவேல் தியாகராஜன் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தாா்.

ஆனால், தவெக வேட்பாளா் மதாா் பதுருதீனிடம் 19,128 வாக்குகள் வித்தியாசத்தில் பழனிவேல் தியாகராஜன் தோல்வியடைந்தாா்.