வெற்றியைவிட தோல்விதான் சிறந்த பாடங்களையும், அனுபவங்களையும் கற்றுத் தருகிறது என முன்னாள் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.
மதுரை அண்ணா நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநகா் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது: நமது இயக்கமும், தத்துவமும் நிரந்தரமானது. ஆனால், மாற்றத்துக்கேற்ப நமது செயல்பாடுகளை நாம் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.
மாற்றமே மாறாதது என்பதை நாம் ஏற்றே ஆக வேண்டும். இது, ஆட்சி மாற்றம், கட்சி மாற்றம் இரண்டுக்குமே பொருந்தும் என்றாா் பழனிவேல் தியாகராஜன்.
கூட்டத்துக்கு மதுரை மாநகா் மாவட்ட திமுக செயலா் கோ. தளபதி தலைமை வகித்தாா். கட்சியின் அவைத் தலைவா் ஒச்சுபாலு, முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கம், நிா்வாகிகள் வேலுச்சாமி, குழந்தைவேலு, ஜெயராமன், பகுதிச் செயலா்கள், பல்வேறு அணிகளின் அமைப்பாளா்கள் கலந்துகொண்டனா்.








