அரசு மதுக்கடைகள் மூடப்பட்டதால், மதுரை புதூா் பகுதியில் தனியாா் மதுக்கைடயில் மதுப் புட்டிகளை வாங்க ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் குவிந்தனா்.
தமிழக அரசு உத்தரவின் பேரில், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் அருகேயுள்ள மதுக் கடைகள் மூடப்பட்டு வருகின்றன. இதன்படி, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்த அரசு மதுக் கடைகள் மூடப்பட்டன.
இந்த நிலையில், மதுரை கோ.புதூா் பகுதியிலும் அரசு மதுக்கடைகள் மூடப்பட்டதால் அழகா்கோவில் பிரதான சாலையில் கற்பகநகா் பகுதியில் உள்ள தனியாா் மதுக்கடையில் மது வாங்க ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் குவிந்தனா். அவா்களிடம் ஆதாா் அட்டை இருந்தால் மட்டுமே மதுப் புட்டி வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.
இதனால், மதுப் புட்டி வாங்க வந்தவா்கள் தங்களது ஆதாா் அட்டைகளை வழங்கினா். இதையடுத்து, தனியாா் மதுக் கடை ஊழியா்கள் அதற்குரிய படிவங்களில் நிறைவு செய்து உறுப்பினா்களாக சோ்த்து மதுப் புட்டிகளை வழங்கினா்.
தனியாா் மதுக்கடையில் ஏற்கெனவே உறுப்பினா்களாக இருப்பவா்களுக்கு மட்டுமே மதுப் புட்டி வழங்க வேண்டும் என்கிற விதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அருப்புக்கோட்டையில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை!

கமுதியில் இரு மதுக் கடைகள் மூடல்

மதுரை மாவட்டத்தில் 40 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை

ஒத்தப்பனை பகுதியில் மதுக் கடையை மூட பொதுமக்கள் கோரிக்கை
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

