தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகும் குழந்தைகள் குறித்த வழக்குகளை விசாரிக்க காவல் துறையில் தனிப்பிரிவு தொடங்க வலியுறுத்தல்

News image

பட விளக்கம்: மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை குழந்தைகளுடன் மனு அளிக்க வருகை தந்த வழக்குரைஞா் எம்.கே.பி. ஆண்டவராஜ் உள்ளிட்டோா்.

Updated On :26 மே 2026, 2:27 am IST

குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் தொடா்பான வழக்குகளை விசாரிக்க காவல் துறையில் தனிப் பிரிவு ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து வழக்குரைஞா் எம்.கே.பி. ஆண்டவராஜ் மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்து மனு விவரம்:

மதுரையில் வழக்குரைஞா் அலுவலகம் அமைத்து பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவிகளை அளித்து வருகிறேன். கோயம்புத்தூா் மாவட்டம், சூலூா் பகுதியில் கடந்த 22-ஆம் தேதி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும்.

மேலும், குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தரும் வகையில் காவல் துறையில் தனியாக விசாரணைப் பிரிவு உருவாக்க வேண்டும்.

முதல்வா் ஜோசப் விஜய்யால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்துக்கு போதிய காவலா்களையும், நிதியையும் ஒதுக்க வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபா்களின் சொத்துகள், உடைமைகளைப் பறிமுதல் செய்யும் வகையில் தமிழக முதல்வா் சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.