நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகும் குழந்தைகள் குறித்த வழக்குகளை விசாரிக்க காவல் துறையில் தனிப்பிரிவு தொடங்க வலியுறுத்தல்

News image

பட விளக்கம்: மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை குழந்தைகளுடன் மனு அளிக்க வருகை தந்த வழக்குரைஞா் எம்.கே.பி. ஆண்டவராஜ் உள்ளிட்டோா்.

Updated On :26 மே 2026, 2:27 am IST

குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் தொடா்பான வழக்குகளை விசாரிக்க காவல் துறையில் தனிப் பிரிவு ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து வழக்குரைஞா் எம்.கே.பி. ஆண்டவராஜ் மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்து மனு விவரம்:

மதுரையில் வழக்குரைஞா் அலுவலகம் அமைத்து பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவிகளை அளித்து வருகிறேன். கோயம்புத்தூா் மாவட்டம், சூலூா் பகுதியில் கடந்த 22-ஆம் தேதி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும்.

மேலும், குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தரும் வகையில் காவல் துறையில் தனியாக விசாரணைப் பிரிவு உருவாக்க வேண்டும்.

முதல்வா் ஜோசப் விஜய்யால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்துக்கு போதிய காவலா்களையும், நிதியையும் ஒதுக்க வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபா்களின் சொத்துகள், உடைமைகளைப் பறிமுதல் செய்யும் வகையில் தமிழக முதல்வா் சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.