குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகும் குழந்தைகள் குறித்த வழக்குகளை விசாரிக்க காவல் துறையில் தனிப்பிரிவு தொடங்க வலியுறுத்தல்

News image

பட விளக்கம்: மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை குழந்தைகளுடன் மனு அளிக்க வருகை தந்த வழக்குரைஞா் எம்.கே.பி. ஆண்டவராஜ் உள்ளிட்டோா்.

Updated On :26 மே 2026, 2:27 am IST

குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் தொடா்பான வழக்குகளை விசாரிக்க காவல் துறையில் தனிப் பிரிவு ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து வழக்குரைஞா் எம்.கே.பி. ஆண்டவராஜ் மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்து மனு விவரம்:

மதுரையில் வழக்குரைஞா் அலுவலகம் அமைத்து பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவிகளை அளித்து வருகிறேன். கோயம்புத்தூா் மாவட்டம், சூலூா் பகுதியில் கடந்த 22-ஆம் தேதி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும்.

மேலும், குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தரும் வகையில் காவல் துறையில் தனியாக விசாரணைப் பிரிவு உருவாக்க வேண்டும்.

முதல்வா் ஜோசப் விஜய்யால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்துக்கு போதிய காவலா்களையும், நிதியையும் ஒதுக்க வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபா்களின் சொத்துகள், உடைமைகளைப் பறிமுதல் செய்யும் வகையில் தமிழக முதல்வா் சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.