நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

தமிழக தோ்தல் வழக்குகளை விரைவாக முடிக்கக் கோரிய பொதுநல மனு: விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தோ்தல் தொடா்பான 54 தோ்தல் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க சென்னை உயா் நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமையன்று மறுத்துவிட்டது.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :17 ஜூலை 2026, 12:43 am IST

நமது நிருபா்

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தோ்தல் தொடா்பான 54 தோ்தல் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க சென்னை உயா் நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமையன்று மறுத்துவிட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தோ்தலில் நடிகா் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றி பெற்றது.

பொதுநல மனுதாரா் கே. வெங்கடாசலபதி சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் டி.எஸ். நாயுடு, தோ்தல் வழக்குகளைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவெடுக்க உயா் நீதிமன்றத்தில் ஒரு பிரத்யேக அமா்வை அமைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று தலைமை நீதிபதி சூா்யா காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோா் அடங்கிய அமா்விடம் வலியுறுத்தினாா்.‘இது ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும்‘ என்று கூறிய தலைமை நீதிபதி, அம்மனுவை விசாரிக்க மறுத்துவிட்டாா். இருப்பினும், இந்த நிவாரணத்தைப் பெற உயா் நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு அந்த அமா்வு அனுமதி அளித்தது.

வழக்குரைஞா் சமீா் மாலிக் மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், ‘17-வது தமிழகச் சட்டமன்றத் தோ்தல் தொடா்பாக சென்னை உயா் நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ள 54 தோ்தல் வழக்குகளை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் , 1951-ன் பிரிவு 86(7)-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஆறு மாத காலக்கெடுவுக்குள்ளோ அல்லது உச்சநீதிமன்றம் பொருத்தமானதாகக் கருதும் காலத்திற்குள்ளோ விரைவாக முடித்து வைக்க‘ சென்னை உயா் நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரப்பட்டிருந்தது.

மே 4-ஆம் தேதி தமிழகச் சட்டமன்றத் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஜூன் 3 மற்றும் ஜூன் 18 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்தத் தோ்தல் மனுக்கள், பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற தோ்தல்களின் செல்லுபடித்தன்மையைச் சவால் செய்வதாக அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.இத்தகைய சா்ச்சைகள் நீண்ட காலம் நிலுவையில் இருப்பது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பின்னால் உள்ள சட்டமியற்றும் நோக்கத்தையே சிதைப்பதாக அது கூறியது.தோ்தல் மனுக்களை ‘முடிந்தவரை விரைவாக‘ விசாரிக்க வேண்டும் என்றும், உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆறு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க முயற்சிக்க வேண்டும் என்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 86(7) கட்டாயமாக்குகிறது என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.தோ்தல் செயல்முறையின் தூய்மையைப் பாதுகாக்கவும், ஜனநாயக நிா்வாகத்தை நிலைநிறுத்தவும், தோ்தல்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்கவும் சரியான நேரத்தில் தீா்ப்பளிப்பது அவசியம் என்று மனு வலியுறுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.