மின் கம்பி அறுந்ததால் வீடுகளில் மின்சாதனங்கள் பழுது

மின் கம்பி அறுந்து விழுந்ததால் ஏற்பட்ட மின் அழுத்தத்தின் காரணமாக வீடுகளில் இயங்கிய மின்சாதனப் பொருள்கள் பழுதாகின.
Updated on
1 min read

மின் கம்பி அறுந்து விழுந்ததால் ஏற்பட்ட மின் அழுத்தத்தின் காரணமாக வீடுகளில் இயங்கிய மின்சாதனப் பொருள்கள் பழுதாகின.

 திண்டுக்கல் சீலப்பாடி பகுதியில் உள்ள மின்கம்பத்தில் சனிக்கிழமை அதிகாலை லாரி மோதியுள்ளது. அப்போது அந்தப் பகுதியில் மின்தடை செய்யப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இதனால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் அங்கிருந்து லாரி சென்றதாகக் கூறப்படுகிறது.

 லாரி மோதியதில் மின் கம்பிகள் அறுந்து ஒன்றொடு ஒன்று உராய்ந்த நிலையில் கிடந்துள்ளன. பின்னர் தடை நீக்கப்பட்டு மின்சாரம் விநியோகம் செய்த போது அறுந்து கிடந்த கம்பிகளில் உயர் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த மின் சாதனங்களான தொலைக்காட்சி, மிக்ஸி, செல்போன் உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

  உடனடியாக மின் வாரிய அதிகாரிகளுக்கும், சீலப்பாடி ஊராட்சி மன்ற  அலுவலகத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் மின் வாரிய ஊழியர்கள் மூலம் மின் கம்பிகள் சரிசெய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com