அதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

234 தொகுதிகளிலும் வெற்றி பெற அதிமுக பிரார்த்தனை

பழனியை அடுத்த தாமரைக்குளம் தானாக வளர்ந்த தங்க கனகம்மன் கோயிலில், அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டி சிறப்புப் பூஜைகள் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

பழனியை அடுத்த தாமரைக்குளம் தானாக வளர்ந்த தங்க கனகம்மன் கோயிலில், அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டி சிறப்புப் பூஜைகள் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன.

   தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பழனியை அடுத்த தாமரைக்குளம் அருள்மிகு தானாக வளர்ந்த தங்க கனகம்மன் திருக்கோயிலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறவும், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், அன்னதானம் நடைபெற்றது.

   தாமரைக்குளம் கிளைக் கழகச் செயலர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அருள்மிகு தங்க கனகம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, நகைகள், பட்டாடை சார்த்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

  உச்சிக்காலத்தின்போது, அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அர்ச்சனையும், தமிழக தேர்தலில் அதிமுக அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனையும் நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.