திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி மாத சஷ்டியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதனையொட்டி முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், அருகிலுள்ள காமாட்சி மெளனகுரு சாமி மடத்திலும் வழிபட்டனர்.
அதேபோல், நத்தம் கோவில்பட்டிலுள்ள கைலாசநாதர் கோயிலில் உள்ள தண்டபாணி சன்னதியிலும் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.