/

பாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்!

News image

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்! - IANS

Updated On :10 மார்ச் 2026, 6:48 pm IST

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று(மார்ச் 10) நடைபெற்றது.

2,600 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைக்கான இந்த ஏலத்தில் ஸாங்க், ஜாஸ் மற்றும் யூஃபோன் ஆகிய மூன்று நிறுவனங்கள் பங்கேற்றன. இன்று நடைபெற்ற ஏலத்தில் மூன்றாவது சுற்றில் ஸாங்க் 110 மெகாஹெர்ட்ஸ், யூஃபோன் 180 மெகாஹெர்ட்ஸ் மற்றும் ஜாஸ் 190 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளை கைப்பற்றின. 5ஜி ஏலத்தில் மொத்தம் 480 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை 50.7 கோடி டாலருக்கு விற்பனையானது.

பாகிஸ்தானில் முதல்முறையாக 5ஜி அறிமுகப்படுத்தப்படும் நிலையில், அதனுடன் சேர்த்து தற்போதுள்ள 4ஜி தொலைத்தொடர்பு சேவையின் தரமும் மேம்படும் என்று அந்நாட்டின் ஐ.டி. துறை அமைச்சர் ஷாஸா ஃபத்திமா கவாஜா பெருமையுடன் குறிப்பிட்டார்.

Summary

Pakistan carries out auction of 5G spectrum

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.