எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாலசமுத்திரம் அகோபிலவரதராஜப் பெருமாள் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா

பழனியை அடுத்த பாலசமுத்திரம் பூதேவி, ஸ்ரீதேவி சமேதர் அகோபிலவரதராஜப் பெருமாள் கோயிலில் நவ.30 ஆம் தேதி நடைபெற

News image
Updated On :9 நவம்பர் 2017, 12:17 am

DIN

பழனியை அடுத்த பாலசமுத்திரம் பூதேவி, ஸ்ரீதேவி சமேதர் அகோபிலவரதராஜப் பெருமாள் கோயிலில் நவ.30 ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி புதன்கிழமை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 கோயில் கொடிக் கம்பம் அருகே சன்னதிக்கான முகூர்த்தக்கால் மற்றும் யாக சாலைக்கான முகூர்த்தக்கால்களுக்கு பிரதானமாக கலசம் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.  முன்னதாக சங்கல்பம், விஷ்வக்சேனர் பூஜை, புண்யா வாஜனம் ஆகியன நடந்தன. பின்னர் கம்பங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு கோயில் உள்பிரகாரம் வலம் வர செய்யப்பட்டது.  இதைத் தொடர்ந்து முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.  தொடர்ந்து பூதேவி, ஸ்ரீதேவி சமேதர்  அகோபிலவரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பாசுரங்கள் சேவித்தல், சாற்றுமுறை நடத்தப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் பழனிக் கோயில் துணை ஆணையர் மேனகா, கண்காணிப்பாளர் முருகேசன் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.