எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மகளிர் சுயஉதவிக்குழுவினர் பேரணி

பழனியில் காந்தி ஜயந்தியையொட்டி  புதன்கிழமை மகளிர் சுயஉதவிக்குழுவினர் பேரணி நடத்தினர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 2:09 am

DIN

பழனியில் காந்தி ஜயந்தியையொட்டி  புதன்கிழமை மகளிர் சுயஉதவிக்குழுவினர் பேரணி நடத்தினர்.
காந்தி கிராமம் வழிகாட்டும் இந்திய நிர்மாண சங்கம் மற்றும் பழனி வட்ட மகளிர் சுயஉதவிக்குழுவினர் சார்பில் பழனி பேருந்து நிலையம், காந்தி சிலை முன் தொடங்கிய பேரணியில் நூற்றுக்கணக்கான மகளிர் சுயஉதவிக்குழுவினர் பங்கேற்றனர்.
பேரணியில் மகாத்மா காந்தியின் பொன்மொழிகள் பொறித்த பதாகைகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பி சென்றனர்.
இப்பேரணி அடிவாரம் கோயமுத்தூர் நஞ்சுண்டாபுரம் நாடார் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது. அங்கு மகாத்மா காந்தியடிகள் பற்றிய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள், நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் இந்தியன் வங்கி துணை மேலாளர் நாராயணமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.