கொடைக்கானலில் பெண்கள் அமைப்பு சார்பில் மதுக்கடையை அகற்றக் கோரி புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் போது பெண்கள் உள்ளிட்ட 75 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கொடைக்கானல் பேருந்து நிலையம் உட்வில்சாலையில் ஆரம்பப் பள்ளி, வழிபாட்டுத்தலம் போன்றவை உள்ளன.
இந்நிலையில் இப்பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் மதுக்கடையை அகற்றக் கோரி கொடைக்கானல் பகுதிகளிலுள்ள பெண்கள் அமைப்பின் சார்பில் பேருந்து நிலையம் உட்வில்சாலையில் போராட்டம் நடைபெற்றது.
அப்போது மதுக்கடையை திறக்க விடாமல் பெண்கள் அமைப்பினர் அப்பகுதிக்குச் சென்றனர்.
அங்கு அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீஸார், பெண்கள் அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமரசம் ஏற்பட வில்லை.
இதனால் ஜெஸிந்தா, மகேந்திரபாபு உள்ளிட்ட பெண்கள் அமைப்பைச் சேர்ந்த 75 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் மாலை 6 மணிக்கு கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வேதாந்தாவின் 4 புதிய நிறுவனங்கள்!

இந்தியா - ஸ்லோவாக்கியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்!

சூப்பர் ஓவரில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி இலங்கை அசத்தல் வெற்றி!

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |
விடியோக்கள்

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK


